தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். சினிமா தவிர்த்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வரும் அவர், சினிமாவில் வெற்றி பெற்ற ரகசியம் குறித்து சொல்லும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.
‘விஜய் ஜெயித்த கதை’ என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்த புத்தகத்தை, எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவர் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் நெல்லையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், தமிழகத்தில் சரித்திரம் படைத்த தலவிஅர்களின் புத்தகத்திற்கு மத்தியில் விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய ‘விஜய் ஜெயித்த கதை’ புத்தகமும் வைக்கபப்ட்டிருந்தது.
இந்த புத்தகத்தில் நடிகர் விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படம் முதல், சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மெர்சல்’ படம் வரையிலான தகவல்களும், அவர் கடந்து வந்த வெற்றி பயணம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...