ஒட்டு மொத்த தமிழர்களையும் தனது இசையால் கட்டிப்போட்டிருக்கும் இளையராஜாவுக்கு மத்திர அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி, அவரிடம் ஆசி பெற்று வருகிறார்கள்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று காலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசிப்பெற்றனர். மேலும், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களும் இளையராஜாவிடம் ஆசிப்பெற்றனர்.
சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் பாலேஸ்வர், செயலாளர் கார்த்திக், பொருளாளர் மதிஒளி குமார் உள்ளிட்டவர்களோடு பிற நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் இளையராஜாவுக்கு மாலை போட்டு, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...