மலேசியாவில் பேரம் பேசிய விஷால் - நடிகர் வராகி குற்றச்சாட்டு!
Thursday February-08 2018

ஸ்ரீ வராகி அம்மன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, இவர்களுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படம் பெரும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படத்தை இயக்கும் வராகி ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்களும், தலைப்பும் ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்த, நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வராகி, விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் மீது வைத்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்று நடைபெற்ற ‘சிவா மனசுல புஷ்பா’ பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே.ராஜான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் நலிவடைந்த கலைஞர்கள் 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்காக முழு தொகையையும் ஜே.கே.ரித்தீஷ் ஏற்றுக்கொண்டதாக வராகி தெரிவித்தார். மேலும், வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததோடு, வராகி தொடர்ந்து தயாரிக்க உள்ள படங்களிலும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய வராகி, “ஏற்கனவே இருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் தவறு செய்ததால் தான், விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால், தற்போது விஷால் தலைமையிலான அணியினர் நடிகர் சங்கத்தை வைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஊழல் குறித்த அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அது குறித்து நான் பல முறை அண்ணன் ரித்தீஷிடம் சொல்லியிருக்கிறேன், முதல் அதை அவர் நம்பவில்லை, தற்போது அவரும் விஷால் மற்றும் அவர்களது அணி பற்றி தெரிந்துக் கொண்டார்.

 

சமீபத்தில் நடைபெற்ற மலேசிய கலை நிகழ்ச்சியில் கூட விஷால் தரப்பு பேரம் பேசினார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இது சும்மா டிரைலர் தான், இன்னும் அவர்கள் செய்த ஊழல் குறித்த முக்கியமான ஆதாரங்களை வெளியிடுவேன். விஷால் தரப்பு மலேசியாவில் யாரிடம் பேரம் பேசினார்கள், எவ்வளவு தொகைக்கு பேரம் பேசினார்கள், என அனைத்தையும் வெளியிடுவேன்.

 

அரசியல்வாதிகள் தான் ஏமாற்றுகிறார்கள், பொய் சொல்கிறார்கள் என்றால் நடிகர்களும் அவர்களைப் போல தான் இருக்கிறார்கள். இதில், இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதாக வேறு சொல்கிறார்கள், அப்படி வந்தால் நாடு என்னத்துக்கு ஆகும் என்று நீங்களே யோசியுங்கள்.” என்று கூறினார்.

Related News

1968

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery