‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீ திவ்யா, அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்றதோடு, சம்பளத்தையும் உயர்த்தினார்.
’பென்சில்’, ‘மாவிரன் கிட்டு’, ‘ஜீவா’ என்று ஸ்ரீ திவ்யா நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக இருந்தது. ஆனால், திடீரென்று ஸ்ரீ திவ்யாவுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் கடந்த ஆண்டு ஸ்ரீ திவ்யா நடிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படம் மட்டுமே ரிலீஸ் ஆனது. தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ என்ற ஒரு படத்தில் மட்டுமே ஸ்ரீ திவ்யா நடித்து வருகிறார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யா, தனது சொந்த மொழியான தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அதற்காக, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தான் நடத்திய புதிய போட்டோ சூட் தொகுப்பை அவர் கொடுத்து வருகிறார்.
தெலுங்கில் கவர்ச்சியாக நடிக்க சொன்னாலும், அதற்கு தயாராக உள்ள ஸ்ரீ திவ்யா, தனது சம்பளத்தை சற்று குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...