’காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக் அறிவித்திருந்தாலும், அப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, ஷர்மிஷ்டா ராய் கலையை நிர்மாணிக்கிறார். ஏகா லகானி உடைகள் வடிவமைப்பை கவனிக்க, திலிப் சுப்பராயண் சண்டைப்பயிற்சி அமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...