Latest News :

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’!
Saturday February-10 2018

’காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக் அறிவித்திருந்தாலும், அப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தோடு, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, ஷர்மிஷ்டா ராய் கலையை நிர்மாணிக்கிறார். ஏகா லகானி உடைகள் வடிவமைப்பை கவனிக்க, திலிப் சுப்பராயண் சண்டைப்பயிற்சி அமைக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Related News

1971

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery