பேய் படங்களை சினிமா தியேட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் விரைவில் சினிமா தியேட்டரிலேயே பேயை பார்க்கப் போகிறார்கள். அந்த தியேட்டர் தான் ‘நாகேஷ் திரையரங்கம்’.
ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. டிரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனம் சார்பில் ராஜேந்திர எம்.ராஜன் தயாரித்துள்ள இப்படத்தை இசாக் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் இசாக் கூறுகையில், “ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக் ஆஷ்னா சவேரி நடித்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர், மனோபாலா, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் லதாவும், சித்தாரவும் நடித்திருக்கிறார்கள். நவுஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையமைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இன்று வரை எண்ணற்ற திகில் படங்களும், பேய் படங்களும் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில், கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் பேய் என்ற புதிய கோணத்தில், படம் உருவாகி இருக்கிறது. படம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக கூறிய தணிக்கை குழுவினர், 19 இடங்களை வெட்டி நீக்கிவிட்டு, யு ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...