நடிகர் பார்த்திபன் - நடிகை சீதா தம்பதியின் இளைய மகளான கீர்த்தனாவுக்கு வரும் மார்ச் 8 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்ஷயை கீர்த்தனா மனக்க உள்ளார்.
மகளின் திருமணத்திற்காக திரையுலக பிரமுகர்களை நேரில் சந்தித்து பார்த்திபன் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். இதற்கிடையே, பிரிந்து வாழும் சீதாவும், பார்த்திபனும் மகளின் திருமணத்திற்காக மீண்டும் சேரப் போவதாக கூறப்பட்டது. மேலும், பார்த்திபன் சீதாவை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், கீர்த்தனா - அக்ஷய் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொண்ட இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் நடிகை சீதா கலந்துக்கொண்டது, பார்த்திபனின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு, இந்த தம்பதி மீண்டும் சேர மாட்டார்களா, என்று எதிர்ப்பார்த்தவர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...