ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய, காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பாரதிராஜாவின் பேச்சு வண்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த புகார் மீது எந்தவித விசாரணையும் போலீஸ் தரப்பில் நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மக்கள் முன்னணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குநர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, வன்முறையை தூண்டும் வகையில் பாரதிராஜா பேசியதாக அளித்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...