சினிமா, சின்னத்திரை என்று இரண்டிலும் பிரபலமாக இருக்கும் காமெடி நடிகர் தாடி பாலாஜி, தற்போது முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் முன்னணி தொகுப்பாளராக இருக்கிறார். கடந்த வருடம் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே நடந்த பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாடி பாலாஜி குடித்துவிட்டு தினமும் தன்னை சித்ரவதை செய்வதாக புகார் கூறிய நித்யா, ஜாதியை குறித்து பேசியும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், தாடி பாலஜி நித்யாவையும் அவரது குழந்தையையும் டார்ச்சர் செய்வது போன்ற வீடியோ ஒன்றையும் நித்யா வெளியிட்டிருந்தார். அதே சமயம், நித்யா குறித்தும் பல திடுக்கிடும் தகவல்களை கூறிய தாடி பாலாஜி, அவர் சில ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதாகவும் கூறியிருந்தார். பிறகு போலீஸ் இவர்களது பிரச்சினையில் தலையிட்டதால், ஒருவரை பற்றி ஒருவர் புகார் கூறிவந்ததை நிறுத்துவிட்டு, தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாடி பாலாஜி மொத்த பிரச்சினை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், என் மனைவி மீது நான் வைத்த காதலே எல்லா பிரசினைக்கும் காரணம். அவர் கல்யாணத்துக்கு பிறகு ஜாலியாக இருக்க வேண்டும் என்று அவருக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தேன். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி இவ்வளவு பிரச்சினைகளை நிகழ்த்திவிட்டார்.
அவருக்கும், ஜிம் டிரைனர் பாசில் என்பவருக்கும் தவறான தொடர்பு இருக்கிறது, அதை நான் கண்டித்து நிறை முறை அவரிடம் கூறியிருக்கிறேன். அதற்கான ஆதாரமும் நிறைய இருக்கிறது, சம்பவங்களும் இருக்கின்றன, என தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...