மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், பல வெற்றிப் படங்களை இயக்கியது போல தனது கவிதாலயா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கும் இந்நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால், ஏலத்திற்கு வந்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இதையடுத்து பல ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வந்த நிலையில், கவிதாலயா நிறுவனம் சார்பில், ஏலம் குறித்து இன்று விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், கவிதாலயா நிறுவனம் வங்கியில் கடன் வாங்கியிருப்பது உண்மை தான், என்றாலும் நிறுவனம் ஏலத்திற்கு வரவில்லை, அது தவறான செய்தி.
நிறுவனத்தின் மீது வங்கியில் உள்ள கடன் தொகையை ஒரே செட்டிமெண்டில் கொடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் கடன் அடைக்கப்பட்டுவிடும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...