சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, ‘கலகலப்பு-2’ வை சுந்தர்.சி இயக்கினார். ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருப்பது, சுந்தர்.சி உள்ளிட்ட ‘கலகலப்பு-2’ படக்குழுவினரை பெரும் சந்தோஷமடைய செய்துள்ளது.
இந்த நிலையில், கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முனையிப்பில் சுந்தர்.சி ஈடுபட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுந்தர்.சி, கலகலப்பு மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று தொடர்ந்து எடுப்பேன், என்று கூறினார். மேலும், ‘கலகலப்பு-3’ யில் ஜீவா, ஜெய் கூட்டணியோடு மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிப்பார் என்றும் அவர் கூறினார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...