Latest News :

‘கலகலப்பு’ மூன்றாம் பாகத்திற்கு ரெடியாகும் சுந்தர்.சி!
Wednesday February-14 2018

சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘கலகலப்பு’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, ‘கலகலப்பு-2’ வை சுந்தர்.சி இயக்கினார். ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

 

தமிழகம் மட்டும் இன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிளும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, வியாபார ரீதியாகவும் வெற்றிகரமாக இப்படம் ஓடிக்கொண்டிருப்பது, சுந்தர்.சி உள்ளிட்ட ‘கலகலப்பு-2’ படக்குழுவினரை பெரும் சந்தோஷமடைய செய்துள்ளது.

 

இந்த நிலையில், கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முனையிப்பில் சுந்தர்.சி ஈடுபட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் ‘கலகலப்பு-2’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுந்தர்.சி, கலகலப்பு மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று தொடர்ந்து எடுப்பேன், என்று கூறினார். மேலும், ‘கலகலப்பு-3’ யில் ஜீவா, ஜெய் கூட்டணியோடு மிர்ச்சி சிவாவும் இணைந்து நடிப்பார் என்றும் அவர் கூறினார்.

Related News

1990

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery