விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்ததாக, சிறப்பான ஓபனிங் உள்ள நடிகராக உள்ள சிவகார்த்திகேயனின் படம் ஒன்று பூஜை போடுவதற்கு முன்பாகவே வியாபரமாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்படத்திற்குப் பிறகு ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏம்.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு பூஜை கூட இன்னும் போடவில்லை. தற்போது முதற்கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இது குறித்து சன் தொலைக்காட்சி தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...