விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்ததாக, சிறப்பான ஓபனிங் உள்ள நடிகராக உள்ள சிவகார்த்திகேயனின் படம் ஒன்று பூஜை போடுவதற்கு முன்பாகவே வியாபரமாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்படத்திற்குப் பிறகு ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏம்.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு பூஜை கூட இன்னும் போடவில்லை. தற்போது முதற்கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இது குறித்து சன் தொலைக்காட்சி தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...