விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்ததாக, சிறப்பான ஓபனிங் உள்ள நடிகராக உள்ள சிவகார்த்திகேயனின் படம் ஒன்று பூஜை போடுவதற்கு முன்பாகவே வியாபரமாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க, இப்படத்திற்குப் பிறகு ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏம்.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு பூஜை கூட இன்னும் போடவில்லை. தற்போது முதற்கட்ட பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இது குறித்து சன் தொலைக்காட்சி தனது இணையத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...