Latest News :

சிவராத்திரியில் சத்குருவுடன் இணைந்த தமன்னா!
Wednesday February-14 2018

இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை தமன்னா, தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்ட தொடங்கியுள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் நேற்று ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் இணைந்து சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் நேற்று முதல் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றது. நேற்று இரவு நான்கு கால அபிஷேக ஆராதனை சிவனுக்கு நடந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் சிறப்பு வழிபாடுகள், நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் லட்சக்கணக்கான பகதர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

இந்த சிறப்பு வழிபாடுகளில் நடிகை தமன்னா கலந்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்குருவுடன் இணைந்து சிவராத்திரியில் தமன்னா சிறப்பு வழிபாடு செய்ததோடு, அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

 

இது குறித்து, தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள தமன்னா, “சத்குரு அவர்களுடன் நானும் ஈஷா யோக மையத்தில் நடந்த சிறப்பு மஹா சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொண்டேன். இது எனக்கு ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து, அனுபவித்தேன். அங்கு பணியாற்றியவர்களை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். எந்த வித சுயநலமும் இல்லாமல், சிறப்பான வழிபாடுகளை செய்து இருந்தனர். நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சத்குருவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது, நினைவில் நிற்கும் சிவராத்திரியாக எனக்கு அமைந்துவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

1994

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

Recent Gallery