Latest News :

புருவத்தால் ரசிகர்களை ஈர்த்த பிரியா வாரியர் மீது போலீசில் வழக்கு!
Wednesday February-14 2018

கேரள திரைப்படங்களும், திரைப்பட பாடல்களும் அவ்வபோது வைரலாக பரவி வருகிறது. பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் மிக வைரலான நிலையில், தற்போது பிரியா வாரியர் என்ற நடிகை தனது புருவ அசைவால், பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

‘ஒரு அடாரு லவ்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை, காதலர் தினத்தை முன்னிட்டு வெளிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி படக்குழுவினரால் வெளியிடப்பட்ட “மாணிக்ய மலராய பூவி” என தொடங்கும் அந்த பாடலை வினீத் ஸ்ரீனிவாசன் பாடியிருக்கிறார்

 

ஒரு பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சியின் போது மாணவர்கள் கூடியிருக்க, அப்போது தனது நண்பனை பார்த்து இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பிரியாவின் பார்வையும், அவர் புருவத்தை உயர்த்தும் விதமும் சமுக வலைதளங்களில் வைரலாக் பரவி வருகிறது.

 

சில நொடிகள் ஓடும் அந்த வீடியோவை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார். தற்போது யூடியூபில் டிரெண்டான வீடியோக்களில் முதலிடத்தில் உள்ள அந்த வீடியோவால், பிரியா வாரியருக்கு தனி ரசிகர்கள் பட்டாளேமே உருவாகியுள்ளது. கேரளா மட்டும் இன்றி தமிழகம், ஆந்திரா என தென்னிந்தியா முழுவதும் பிரியா வாரியர் பிரபலமாகியுள்ளார்.

 

இந்த நிலையில், பிரியா வாரியர் மீது ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ”மாணிக்க மலராய பூவி..” பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மனதை புன்படுத்துவதாக கூறி, பிரியா வாரியர் மற்றும் இயக்குநர் மீது ஐதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

1995

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான்!
Sunday November-02 2025

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...

Recent Gallery