பிரகாஷ் ராஜ் - லலிதாகுமாரி தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிரகாஷ் ராஜ் தற்போது பாலிவுட் நடன இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளுடன் வசித்து வரும் லலிதாகுமரி, திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் நடிகை லலிதாகுமாரி கடந்த சில மாதங்களாக பணத்திற்காக ரொம்பவும் கஷ்ட்டப்பட்டு வந்திருக்கிறார். இதனை அறிந்த பிரகாஷ் ராஜ், விரைவில் தமிழில் வர உள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிப்பதற்கு லலிதாகுமாரிக்கு நிதியுதவி அளித்திருப்பதோடு, தொலைக்காட்சியிடம் ஸ்லாட் ஒதுக்க பரிந்துரையும் செய்துள்ளார்.
இதன் மூலம் சீரியல் தயாரிப்பாளராகியுள்ள லலிதாகுமாரிக்கு, சீரியல் தயாரிப்பதன் மூலம் மாதத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். திருமணம் முறிந்து விவாகரத்து ஆன பிறகும், தனது முன்னாள் மனைவியின் கஷ்ட்டத்தைப் போக்க பிரகாஷ் ராஜ், செய்த காரியத்தால், திரையுலகத்தினர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...