பிரகாஷ் ராஜ் - லலிதாகுமாரி தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிரகாஷ் ராஜ் தற்போது பாலிவுட் நடன இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளுடன் வசித்து வரும் லலிதாகுமரி, திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் நடிகை லலிதாகுமாரி கடந்த சில மாதங்களாக பணத்திற்காக ரொம்பவும் கஷ்ட்டப்பட்டு வந்திருக்கிறார். இதனை அறிந்த பிரகாஷ் ராஜ், விரைவில் தமிழில் வர உள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிப்பதற்கு லலிதாகுமாரிக்கு நிதியுதவி அளித்திருப்பதோடு, தொலைக்காட்சியிடம் ஸ்லாட் ஒதுக்க பரிந்துரையும் செய்துள்ளார்.
இதன் மூலம் சீரியல் தயாரிப்பாளராகியுள்ள லலிதாகுமாரிக்கு, சீரியல் தயாரிப்பதன் மூலம் மாதத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். திருமணம் முறிந்து விவாகரத்து ஆன பிறகும், தனது முன்னாள் மனைவியின் கஷ்ட்டத்தைப் போக்க பிரகாஷ் ராஜ், செய்த காரியத்தால், திரையுலகத்தினர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார்...
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...