பிரகாஷ் ராஜ் - லலிதாகுமாரி தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிரகாஷ் ராஜ் தற்போது பாலிவுட் நடன இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளுடன் வசித்து வரும் லலிதாகுமரி, திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் நடிகை லலிதாகுமாரி கடந்த சில மாதங்களாக பணத்திற்காக ரொம்பவும் கஷ்ட்டப்பட்டு வந்திருக்கிறார். இதனை அறிந்த பிரகாஷ் ராஜ், விரைவில் தமிழில் வர உள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிப்பதற்கு லலிதாகுமாரிக்கு நிதியுதவி அளித்திருப்பதோடு, தொலைக்காட்சியிடம் ஸ்லாட் ஒதுக்க பரிந்துரையும் செய்துள்ளார்.
இதன் மூலம் சீரியல் தயாரிப்பாளராகியுள்ள லலிதாகுமாரிக்கு, சீரியல் தயாரிப்பதன் மூலம் மாதத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். திருமணம் முறிந்து விவாகரத்து ஆன பிறகும், தனது முன்னாள் மனைவியின் கஷ்ட்டத்தைப் போக்க பிரகாஷ் ராஜ், செய்த காரியத்தால், திரையுலகத்தினர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...