பிரகாஷ் ராஜ் - லலிதாகுமாரி தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பிரகாஷ் ராஜ் தற்போது பாலிவுட் நடன இயக்குநரை திருமணம் செய்துக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். தனது குழந்தைகளுடன் வசித்து வரும் லலிதாகுமரி, திரைப்படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், போதிய வருவாய் இல்லாமல் இருக்கும் நடிகை லலிதாகுமாரி கடந்த சில மாதங்களாக பணத்திற்காக ரொம்பவும் கஷ்ட்டப்பட்டு வந்திருக்கிறார். இதனை அறிந்த பிரகாஷ் ராஜ், விரைவில் தமிழில் வர உள்ள தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் தயாரிப்பதற்கு லலிதாகுமாரிக்கு நிதியுதவி அளித்திருப்பதோடு, தொலைக்காட்சியிடம் ஸ்லாட் ஒதுக்க பரிந்துரையும் செய்துள்ளார்.
இதன் மூலம் சீரியல் தயாரிப்பாளராகியுள்ள லலிதாகுமாரிக்கு, சீரியல் தயாரிப்பதன் மூலம் மாதத்திற்கு கணிசமான வருவாய் கிடைக்கும். திருமணம் முறிந்து விவாகரத்து ஆன பிறகும், தனது முன்னாள் மனைவியின் கஷ்ட்டத்தைப் போக்க பிரகாஷ் ராஜ், செய்த காரியத்தால், திரையுலகத்தினர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...