‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று மூன்று அவதாரங்களை ஒரே சமயத்தில் எடுத்த சசிகுமார், தொடர்ந்து ஹீரோவாக சில வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், இயக்குநராக தனது இரண்டாவது படத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். பிறகு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு தயாரிப்பு மற்றும் நடிப்பு என்று இருந்தவர், பாலுமகேந்திராவுக்காகவும், பாலாவுக்கும் சில படங்களை தயாரித்தார்.
சசிகுமார் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவர் பெரும் கடனாளியாகிவிட்டார். அவர் வாங்கிய கடன் தான், அவரது உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் என்பவரை காவு வாங்கிவிட்டது. அசோக் குமாரின் மரணத்தால் சசிகுமாருக்கு கடன் கொடுத்த அன்பு செழியன் தலைமறைவானாலும், சசிகுமாரை கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்க ஆரம்பித்துள்ளனர். இதை அறிந்த சமுத்திரக்கனி சசிகுமாருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக, சசிகுமாருக்கு இருந்த ரூ.18 கோடி கடனை சமுத்திரக்கனி கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடன் தொல்லையால் சசிகுமாரி கஷ்ட்டப்படுவதை அறிந்து அவருக்கு யாருதும் உதவி செய்ய முன் வராத நிலையில், சமுத்திரக்கனி தன்னிடம் இருந்த பணத்தை அவருக்கு கொடுத்து உதவி செய்துள்ளார். அதே சமயம், சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ படத்தில் நடித்து வரும் சசிகுமார், இப்படத்திற்கு பிறமும் சமுத்திரக்கனி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...