’திருட்டு விசிடி’, ‘மதுரை மாவட்டம்’ ஆகியப் படங்களில் நடித்திருக்கும் பிரபா, இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ‘வைபவ் 2018’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரபா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசிய பிரபா, “பெண்கள் கல்லூரி என்றதும் கொஞ்சம் பயந்து, தயக்கத்துடன் தான் இங்கே வந்தேன். ஆனால், இங்கே வந்து பார்த்ததும் உங்களை கண்டு வியந்தேன். இங்குள்ள அனைவருமே அன்பை பொழிந்தார்கள். நீங்கள் ஆண்களை விட மிகுந்த திறமைசாலிகளாக இருக்கிறீர்கள். பெண்கள் தான் இந்த நாட்டையும் வீட்டையும் தாங்குபவர்கள். நீங்கள் மிகுந்த தைரியத்துடன் இருக்க வேண்டும். எதிர்த்து போராடும் குணத்தை கற்றுக்கொள்ள வெண்டும். இது உங்களின் வாழ்வில் முக்கியமான பருவம். இப்போது படிப்பில் கவனம் செலுத்துங்கள். தாய், தந்தையை ஆசிரியரை மதியுங்கள். உங்கள் வாழ்வு இப்போது உங்களின் கடின முயற்சியில் உள்ளது. எல்லோரும் வாழ்வில் பெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...