ரூ.6.2 கோடியை திருப்பி தர வேண்டும் - லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Tuesday February-20 2018

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான‘கோச்சடையான்’ மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதனால், அப்படத்தை தயாரித்த ரஜினிகாந்தின் மனைவி லதா கடனாளியானார். 

 

ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா இயக்கிய இப்படத்திற்காக ஆட்பீரோ நிறுவனத்திடம் இருந்து லதா ரஜினிகாந்த், ரூ.10 கடன் வாங்கியிருந்தார். ஆனால் இந்த கடனில் ரூ.1.5 கோடி மட்டுமே இதுவரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்பீரோ நிறுவனத்திடம் வாங்கிய ரூ.10 கோடியில் ரூ.8.5 கோடியை லதா ரஜினிகாந்த் திருப்பி செலுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்திடம் நீதிபதிகள், கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள்?, எதற்காக கடனை செலுத்தவில்லை? ஆகிய கேள்விகளை கேட்டதோடு, அந்த கேள்விக்கான மதியம் 12.30 மணிக்குள் தெரிவிக்குமாறும் கூறினார்கள்.

 

உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு முடிவடைந்த நிலையில், ரூ.6.2 கோடி நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related News

2025

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery