இயக்குநராக இருக்கும் கவுதம் மேனன், ஒரு பக்கம் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். அப்படி அவர் தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் டெக்னீஷன்களுக்கு சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இளம் இயக்குநர் ஒருவருக்கு பெரிய அளவில் மொட்டை போடவும் கவுதம் மேனன் முயற்சியில் இருக்கிறாராம்.
’துருவங்கள் பதினாறு’ மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் கார்த்திக் நரேன். இளம் இயக்குநராக இவரது முதல் படத்தை ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பாராட்டியது. இந்த படத்தை இயக்கியதோடு, சொந்தமாகவும் கார்த்திக் நரேன் தயாரித்திருந்தார். தற்போது தனது இரண்டாவது படமான ‘நரகாசூரன்’ படத்தையும் கார்த்திக் நரேன் முடித்துவிட்டு ரிலீஸ் செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், ‘நரகாசூரன்’ படத்தில் தனக்கு சரிபாதி பங்கு வேண்டும், என்று கவுதம் மேனன் கார்த்திக் நரேனிடம் கேட்டிருக்கிறாராம். இந்த படம் தொடங்கும் போது கார்த்திக் நரேனுடன் இணைந்து படத்தை தயாரிக்க முன் வந்த கவுதம் மேனன் 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தாராம். பிறகு எந்த தொகையும் அவரிடம் இருந்து வரவில்லையாம். இதனால், முழு பணத்தையும் கார்த்திக் நரேனே போட்டு படத்தை முடித்துவிட்டாராம்.
ஆனால், படம் முடிந்தது வியாபாரப் பணிகள் தொடங்கிய உடன், கார்த்திக் நரேனிடம் கவுதம் மேனன் சரிபாதி பங்கு கேட்பதாக கூறப்படுகிறது. வெறும் 5 லட்ச ரூபாயை கொடுத்தவருக்கு எப்படி சரிபாதி பங்கு கொடுப்பது, என்று கார்த்திக் நரேன் யோசித்துக் கொண்டிருக்க, அவரிடம் இருந்து பணத்தை வாங்கும் முயற்சியில் கவுதம் இறங்கியிருக்கிறாராம்.
ஆக, எப்படியும் இருவருக்கும் இடையே விரைவில் பஞ்சாயத்து தொடங்க இருப்பது மட்டும் உறுதி.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...