இயக்குநராக இருக்கும் கவுதம் மேனன், ஒரு பக்கம் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். அப்படி அவர் தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் டெக்னீஷன்களுக்கு சம்பளம் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இளம் இயக்குநர் ஒருவருக்கு பெரிய அளவில் மொட்டை போடவும் கவுதம் மேனன் முயற்சியில் இருக்கிறாராம்.
’துருவங்கள் பதினாறு’ மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் கார்த்திக் நரேன். இளம் இயக்குநராக இவரது முதல் படத்தை ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பாராட்டியது. இந்த படத்தை இயக்கியதோடு, சொந்தமாகவும் கார்த்திக் நரேன் தயாரித்திருந்தார். தற்போது தனது இரண்டாவது படமான ‘நரகாசூரன்’ படத்தையும் கார்த்திக் நரேன் முடித்துவிட்டு ரிலீஸ் செய்வதற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், ‘நரகாசூரன்’ படத்தில் தனக்கு சரிபாதி பங்கு வேண்டும், என்று கவுதம் மேனன் கார்த்திக் நரேனிடம் கேட்டிருக்கிறாராம். இந்த படம் தொடங்கும் போது கார்த்திக் நரேனுடன் இணைந்து படத்தை தயாரிக்க முன் வந்த கவுதம் மேனன் 5 லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்தாராம். பிறகு எந்த தொகையும் அவரிடம் இருந்து வரவில்லையாம். இதனால், முழு பணத்தையும் கார்த்திக் நரேனே போட்டு படத்தை முடித்துவிட்டாராம்.
ஆனால், படம் முடிந்தது வியாபாரப் பணிகள் தொடங்கிய உடன், கார்த்திக் நரேனிடம் கவுதம் மேனன் சரிபாதி பங்கு கேட்பதாக கூறப்படுகிறது. வெறும் 5 லட்ச ரூபாயை கொடுத்தவருக்கு எப்படி சரிபாதி பங்கு கொடுப்பது, என்று கார்த்திக் நரேன் யோசித்துக் கொண்டிருக்க, அவரிடம் இருந்து பணத்தை வாங்கும் முயற்சியில் கவுதம் இறங்கியிருக்கிறாராம்.
ஆக, எப்படியும் இருவருக்கும் இடையே விரைவில் பஞ்சாயத்து தொடங்க இருப்பது மட்டும் உறுதி.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...