நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை வெளியிட்டார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இக்கட்சியின் கொடியில் ஆறு கைகள் இணைந்திருப்பது போன்ற சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சின்னத்திற்கான அர்த்தம் என்னவாக இருக்கும், என்று மக்களிடம் விவாவதம் ஏற்பட்ட நிலையில், கமலே அதற்கான அர்த்தத்தை கூறியுள்ளார்.
அதாவது, சின்னத்தை உற்றுப் பார்த்தால், அந்தக் கொடியில் இருக்க்ம் 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலத்தைக் குறிக்கும் என்றும், நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும், என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் தன்னை வட மாநிலம் என சொல்லிக் கொள்ளாமல், தென் மாநிலங்களுள் ஒன்றாகவே கருதும் மராட்டிய மாநிலம் ஆகியவை தான் இந்தியாவின் பெரும்பான்மை நிதி ஆதாரமாகத் திகழ்கின்றன. குறிப்பாக மராட்டியமும், தமிழகமும் இந்தியாவின் மொத்த வருமானத்தில் கிட்டதட்ட பாதி பங்களிப்பைத் தருகின்றன. எனவே தென் மாநிலங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால், மத்திய அரசிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியும், என்று கமல்ஹாசன் பேசியிருப்பதும், கட்சி சின்னத்தில் தென் மாநிலங்களை இணைத்திருப்பதும் மத்திய அரசுக்கு பெரும் நெருடிக்கடையை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...