‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ராம்கி, சில காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், கார்த்தியின் ‘பிரியாணி’ படம் மூலம் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்தார். பிறகு ’மாசாணி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர், தற்போது தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ராம்கியின் நடிப்பில் வெளியான ‘இங்கிலீஷ் படம்’ என்ற படம் சுமாராக ஓடியது. இந்த நிலையில், நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வரியை ராம்கி கட்டவில்லையாம். அதன் நிலுவைத் தொகையான ரூ.1.17 லட்சம் சொத்து வரி செலுத்தாத காரணத்தால் ராம்கி வீட்டிற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...