‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘செந்தூரப்பூவே’, ‘இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ராம்கி, சில காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், கார்த்தியின் ‘பிரியாணி’ படம் மூலம் வில்லனாக ரீ எண்ட்ரி கொடுத்தார். பிறகு ’மாசாணி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர், தற்போது தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ராம்கியின் நடிப்பில் வெளியான ‘இங்கிலீஷ் படம்’ என்ற படம் சுமாராக ஓடியது. இந்த நிலையில், நடிகர் ராம்கிக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக சொத்து வரியை ராம்கி கட்டவில்லையாம். அதன் நிலுவைத் தொகையான ரூ.1.17 லட்சம் சொத்து வரி செலுத்தாத காரணத்தால் ராம்கி வீட்டிற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...