தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் இருந்து நயந்தாராவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும், அவர் தற்போது தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதை தவிர்த்து வருபவர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளோடு, ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பும் அவருக்கு ஏராளமாக வந்துக்கொண்டிருப்பதால், ஹீரோக்களோடு நடிக்க ரெடி, ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என்ற கண்டிஷன் போடுகிறாராம்.
இந்த நிலையில், விஜயின் 62 வது படத்தில் நயந்தாராவை ஹீரோயினாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதே சமயம், அஜித்தின் ‘விஸ்வாசம்’ குழுவும் நயந்தாராவை ஹீரோயினாக்க முயற்சித்த போது, நயந்தாரா அஜித்துக்கு ஓகே சொல்லிவிட்டார். அதுமட்டும் அல்ல, நயந்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் அஜித் கதை கேற்பதற்கான அப்பாயின்மெண்டையும் நயந்தாரா வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.
ஏற்கனவே, விஷ்ணு வர்தன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என்று சிலர் கூறிக்கொண்டிருக்க, இதற்கு நடுவே பிரபு தேவா ஒரு கதையை சொல்லியிருக்கிறார், என்ற தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விக்னேஷ் சிவனும் அஜித்துக்காக கதை சொல்ல காத்துக் கொண்டிருக்கிறாராம்.
அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற போட்டியில் விஷ்ணு வர்தன் ஒரு பக்கம் இருந்தாலும், நயந்தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவாவா அல்லது இன்னாள் காதலர் விக்னேஷ் சிவனா, என்ற போட்டி தான் தற்போது கோடம்பாக்கத்தின் பரபரப்பு செய்தியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...