சினிமாவில் நடிகைகளுக்கு எப்படி பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறதோ அதுபோல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் மற்றும் தொகுப்பாளினிகளுக்கும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, சிலர் தாங்கள் பணிபுரியும் தொலைக் காட்சிகளில் இருந்து வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சினிமாவில் காமெடி வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் தேவதர்ஷினி, பிரபல சேனல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சில் ஒன்றில் நடித்து வந்தார். சுமார் 300 எபிசோட்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து தேவதர்ஷினி, திடீரென்று விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவதர்ஷினியின் இந்த முடிவுக்கு பின்னால் எத்தகைய பிரச்சினை இருக்கும் என்று ரசிகர்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அவரே தான் சேனலில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய தேவதர்ஷினி, “ஒரு மாற்றத்திற்காக தான், சின்ன பிரேக் தேவைப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அது என் குடும்ப சேனல் தான், எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.” என்று கூறியுள்ளார்.
தேவதர்ஷினி, தற்போது தமிழ் சினிமாவைப் போல, தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்று வருகிறாராம். அங்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவதால் அவர் டிவியில் பணியாற்றுவதில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...