கமல்ஹாசன் கட்சியையும் தொடங்கி பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்துவிட்ட நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வரும் அவர், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார். அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி.
கமலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், :நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும், எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்.” என்றவரிடம், எப்போது கமலை போல பொதுக்கூட்டம் நடத்தப்போகிறீர்கள், என்று கேட்டதற்கு, “இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதேபோல் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் அடுத்தக்கட்ட முடிவு பற்றி அறிவிப்பேன்.” என்றார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...