கமல்ஹாசன் கட்சியையும் தொடங்கி பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்துவிட்ட நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்பில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நிர்வகித்து வரும் அவர், இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார். அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து கேட்டபோது, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது வரவேற்கத்தக்கது என்றார் ரஜினி.
கமலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், :நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும், எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வதே. கமலின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. முழுவதும் பார்த்தேன்.” என்றவரிடம், எப்போது கமலை போல பொதுக்கூட்டம் நடத்தப்போகிறீர்கள், என்று கேட்டதற்கு, “இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். இதேபோல் தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் அடுத்தக்கட்ட முடிவு பற்றி அறிவிப்பேன்.” என்றார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது...
எம் என் ஆர் பிக்சர்ஸ் சார்பில், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, இயக்குநர் எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் அருமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்...
ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் இன் "உசுரே" திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் இன்று பிரசாத் லேப் திரை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது...