‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் விஜயின் 62 வது படமாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதற்கிடையே, விஜயின் 63 வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆரம்பத்தில் அட்லி பெயர் அடிபட்டாலும், தற்போது அட்லியை விஜய் கழட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அட்லி நிச்சயம் விஜய் படத்தை இயக்கப் போவதில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், மோகன் ராஜா விஜயை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனால், மோகன் ராஜா தான் விஜயின் 63 வது படத்தை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குநரும் விஜய்க்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், விஜயை வைத்து ‘ஜில்லா’ என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த நெல்சன் தான் விஜயின் 63 வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...