தமிழ் சினிமாவின் பிளே பாய் என்று அழைக்கப்படும் ஆர்யா, எப்போது திருமணம் செய்துக்கொள்வார் என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்த நிலையில், தற்போது பெண் தேடும் படலத்தை தொலைக்காட்சி ஒன்றில் தொடங்கியுள்ள ஆர்யா, அதற்காக ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளார்.
அனைத்து தரப்பு பின்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 16 பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இந்த பெண்களில் ஒருவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஆர்யாவை யார் கவர்வார்கள் என்பது நிகழ்ச்சியின் முடிவில் தான் தெரியும்.
இந்த நிலையில், இதில் கனடாவில் இருந்து வந்திருக்கும் சூசனா என்ற பெண்ணும் பங்கேற்றுள்ளார். இலங்கையை சேர்ந்தவரான அவர், கதிர்வீச்சு சிகிச்சை நிபுணராக உள்ளாராம்.
அந்த பெண் ஆர்யாவிடம் பேசும் போது, தான் விவாகரத்தனவர், தனக்கு ஒரு மகன் இருக்கிறான், என்ற தகவலை கூறியுள்ளார்.
இதைக் கேட்ட ஆர்யா ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளார், இனி அவர் இந்த பெண் விவகாரத்தில் எத்தகைய முடிவு எடுக்கப் போகிறார் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...