ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்கிவிட்டதால் இனி தமிழ் சினிமாவில் அவர்கள் இடத்தையும் சேர்த்து விஜய் மற்றும் அஜித் தான் ஆட்சி புரிவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் திடீரென்று தனது புதிய படத்தின் அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
நடிப்புக்கு முழுக்குப் போடும் செய்தியை மருத்திருக்கும் கமல்ஹாசனும், அரசியல் மட்டும் அல்ல எங்கு என்றாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்றும் கூரியுள்ளார். ஆக, மொத்தத்தில் அரசியல் கை கொடுக்கவில்லை என்றால், நமது பழைய தொழிலான சினிமாவை தொடரலாம் என்று இந்த இரண்டு ஜாம்பவான்களும் முடிவு செய்திருப்பது இவர்களது அரசியல் நடவடிக்கையில் நன்றாக தெரிகிறது.
ரஜினிகாந்தின் நடிப்பில் மிக பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்தது. ஆனால், சில காரணங்களால் ரஜினிகாந்தின் ‘காலா’ படம் முதலில் ரிலீஸ் ஆக உள்ளது. இருந்தலும், காலா வெளியான சில வாரங்களுக்குப் பிறகு 2.0 படத்தையும் வெளியிடலாம் என்று தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. காரணம் கோடை விடுமுறையின் போது வெளியிட்டால் வசூலை அள்ளிவிடலாம் என்பது அவர்களது திட்டமாக இருந்தது.
இந்த நிலையில், 2.0 படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் தீபாவளிக்கு அப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளிக்கு அஜித்தின் ‘விஸ்வாசம்’ மற்றும் விஜயின் 62 வது படம் வெளியாக இருந்தது. இந்த நிலையில் 2.0 படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதால், ரஜினி படத்துடன் போட்டி போடாமல், அவருக்கு விஜயும், அஜித்தும் வழி விட்டு ஒதுங்கிவிடுவார்கள், என்று கூறப்படுகிறது. இதனல், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...