தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய எதிரியாக திருட்டு விசிடி விளங்குகிறது. இந்த திருட்டி விசிடி-யை ஒழிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக திரையரங்குகளில் கேமரா வைத்து திருட்டு விசிடி தயாரிக்கப்படுவதாக சமீபத்தில் வெளியான ‘மனுஷனா நீ’ திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கஸாலி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கஸாலி கூறுகையில், “இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும், தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்துள்ளனர்.
1பாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்த தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது, என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்த தியேட்டர் மீது போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.
இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டுக்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை தமிழ் சினிமாவுக்கு இழப்பு ஏற்படுகிறது.” என்று தெரிவித்தார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...