ரஜினிகாந்தின் ’காலா’, ‘2.0’ என இரண்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் அவரது புதிய கட்சி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகமாக உள்ள நிலையில், திடீரென்று தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்ட போதிலும், பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து எந்த விபரத்தை வெளியிடவில்லை.
இதற்கிடையே, கபாலி, காலா ஆகிய படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கும் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பினர் சந்தோஷ் நாராயணன் என்று கூறி வந்தாலும், அது அதிகாரப்பூர்வமான தகவல் என்றே கூறப்படுகிறது.
மொத்தத்தில், ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பது சந்தோஷ் நாராயணன் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...