ரஜினிகாந்தின் ’காலா’, ‘2.0’ என இரண்டு படங்கள் வெளியாக உள்ள நிலையில், அவர் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். விரைவில் அவரது புதிய கட்சி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகமாக உள்ள நிலையில், திடீரென்று தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்ட போதிலும், பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து எந்த விபரத்தை வெளியிடவில்லை.
இதற்கிடையே, கபாலி, காலா ஆகிய படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கும் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது.
இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தரப்பினர் சந்தோஷ் நாராயணன் என்று கூறி வந்தாலும், அது அதிகாரப்பூர்வமான தகவல் என்றே கூறப்படுகிறது.
மொத்தத்தில், ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பது சந்தோஷ் நாராயணன் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...