பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி, இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, துபாயின் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதிலேயே நடிக்க தொடங்கினார். தமிழில் வெளியான ‘துணைவன்’ என்ற படத்தில் முருகன் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பிறகு ஹீரோயினாக தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய மொழி மற்றும் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி, மாம் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.
2013 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதேவி, பிலிம்பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்துக்காக தமிழக அரசின் விருது என பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீதேவின் திடீர் மரணம் இந்திய திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #FlimActress #Sridevi #tamilnews
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...