ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் - பாத்ரூமில் இறந்ததாக தகவல்
Monday February-26 2018

திருமண நிகழ்ச்சிக்காக துபாய்க்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்த நிலையில், அவர் பாத்ரூமில் விழுந்தததால் தான் மரணம் அடைந்தார் என்ற தகவல் துபாயில் பரவி வருகிறது.

 

துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருக்கும் பாத் டப்பில் மயங்கிய நிலையில் அவர் கிடந்ததாகவும், பிறகு அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவமனை தரப்பில் உயிரிழந்த நிலையில் தான் ஸ்ரீதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமண நிகழ்ச்சிக்கு பிறகு போனி கபூரும், ஸ்ரீதேவியும் பேசிக் கொண்டிருந்தார்களாம். பின்னர் இரவு விருந்துக்கு செல்ல இருந்த ஸ்ரீதேவி, பாத்ரூம் சென்றுள்ளார். 15 நிமிடங்கள் ஆகியும் அவர் வெளியில் வராததால் போனி கபூர் கதவை தட்டியுள்ளார். எந்தவித பதிலும் இல்லாததால், உறவினர் ஒருவரை அழைத்து கதவை உடைத்து பார்த்திருக்கிறார். அப்போது ஸ்ரீதேவி மயங்கி கிடந்தது தெரிய வந்துள்ளத். உடனே அவரை மீட்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்றதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related News

2060

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery