மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீதேவின் இறப்பில் சில மர்மங்கள் நிலவி வரும் நிலையில், அவரது இறுதிச் சடங்கு இன்று (பிப்.26) மும்பையில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டிய ஸ்ரீதேவி, 80 களில் இந்தி சினிமாவில் கால் பதித்தார். அங்கும் வெற்றி மேல் வெற்றியைக் குவித்த அவர், பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார்.
1997-ல் போனி கபூரைத் திருமணம் செய்த பிறகு நடிப்பிலிருந்து விலகிய ஸ்ரீதேவி, 2012-ல் மீண்டும் நாயகியாகவே நடிக்க ஆரம்பித்தார். இப்போதும் ஆண்டுக்கு ஒரு படம் என்ற கணக்கில் நடித்துக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தபோது, மாரடைப்பால் காலமானார் ஸ்ரீதேவி. அவரது இந்த திடீர் மறைவு இந்தியத் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறைந்த ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு துபாயிலிருந்து மும்பைக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, பகல் 12 மணிக்குப் பின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியத் திரையுலகமே மும்பைக்கு திரண்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று இறுதிச் சடங்கில் நேரடியாகப் பங்கேற்கிறார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...