Latest News :

சமூக வலைதளங்களினால் சீரழியும் பெண்களை பற்றி சொல்லும் படம்!
Monday February-26 2018

ஆண்டவர் மூவிஸ் சார்பில் மும்தாஜ் யாஸ்மின் தயாரிக்கும் படம் ‘உயிரே உன்னை நான் அறிந்தேன்’. அறிமுக நாயகர்கள் ராகுல், ஷியாம் மற்றும் அறிமுக நாயகிகள் மோனிஷா, சஞ்சனா ஆகியோருடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி வெற்றிச்செல்வன் இயக்குகிறார். ஏ.ஆர்.நேசன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.வி.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அசோக்தேவன் பாடல்கள் எழுதியுள்ளார்.

 

சமூக வலைதளங்கள் மூலம் பல முன்னேற்றம் உண்டு என்றாலும், அவற்றால் சீரழிவுகளும் கணக்கில் அடங்காதவை. இன்றைய இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் எப்போதும் நேரம் போவது தெரியாமல் பேஸ்புக், ட்விட்டர் என பொழுதை கழித்து வருகிறார்கள். இதனை மைய கருவாகக் கொண்டு தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 

கல்லூரி மாணவி ஒருவளுக்கு சமூக வலைத்தளம் மூலமாக ஒரு நட்பு ஏற்படுகிறது. அது கூடா நட்பு என்று அறியாத அந்த மாணவி முகம் தெரியாத அந்த இளைஞனிடம் தனது மனதை பறிக்கொடுக்கிறாள். இதே வலைதளம் மூலமாக மாணவியின் வாழ்க்கையில் வேறு ஒரு இளைஞன் குறுக்கிடுகிறான். இந்த சிக்கலான பிரச்சினையில் இருந்து அந்த இலம் பெண் எப்படி தன்னை காத்துக் கொள்கிறாள் என்பதன் பின்னணியில், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

 

இப்படத்தின் பெரும்பாலன காட்சிகள் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகள் ஏலகிரி, ஏற்காடு, ஊட்டி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Related News

2068

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery