நேற்று முன் தினம் துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்னம் இந்தியாவுக்கு வரவில்லை. இன்று அவருக்கு மும்பையில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ஏராளமான நடிகர் நடிகைகள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். ரஜினிகாந்த் நேற்று இரவே மும்பை சென்றார். கமல்ஹாசன் இன்று 3 மணிக்கு புறப்பட்டார்.
இதற்கிடையே, ஸ்ரீதேவின் உடல் இன்று நள்ளிரவு வரக்கூடம் என்பதால் அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தகவல் கூறுகின்றன.
ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தார் கூறிவந்த நிலையில், அவரது உறவினர் சஞ்சய் கபூர், அவர் அழகுக்காக செய்துக் கொண்ட அறுவை சிகிச்சைய்யால் தான் உயிரிழந்தார் என்று கூறினார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவி மது போதையினால் தான் பாத்ரூமில் விழுந்து உயிரிழந்ததாக துபாய் அரசு மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மேலும், மது போதையில் குளிக்க சென்ற ஸ்ரீதேவி பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
மொத்தத்தில், அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...