Latest News :

கவிஞர் நா.முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
Monday August-14 2017

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றதோடு, தனது இனிமையான வரிகளால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமாரின் முதலாவது நினைவு தினம் இன்று (ஆக.14) அனுசரிக்கப்படுகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார், திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதோடு, ’பட்டாம்பூச்சி விற்பவன்’, ’நியூட்டனின் மூன்றாம் விதி’ உள்ளிட்ட பல கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த அணிலாடும் முன்றில், என்ற இவரது தொடர் கதை மிகவும் பிரபலமானது.

 

தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற நா.முத்துக்குமார், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டில் அதிகப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற சாதனையை நிகழ்த்திக்கொண்டு இருந்தார்.

 

இதற்கிடையே, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலமானார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

நா.முத்துக்குமார் மறைந்தாலும், “ஆனந்த யாழை மீட்டுகிறாள்...” உள்ளிட்ட அவரது பாடல் வரிகளும், கவிதை தொகுப்புகளும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது.

Related News

208

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery