Latest News :

துபாய் போவதற்கு முன்பாக ஸ்ரீதேவி தோழியிடம் கூறியது - புது தகவலால் பரபரப்பு
Wednesday February-28 2018

தனது உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி, திருமணம் முடிந்த பிறகு ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, பாத்ரூம் டப்பில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை பரிசோதித்த துபாய் மருத்துவர்கள், அவரது ரத்தத்தில் மது கலந்திருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து, ஸ்ரீதேவி மரணத்தில் பல கேள்விகளை எழுப்பிய துபாய் போலீஸ், அவரது கணவர் போனி கபூரிடமும் விசாரணை நடத்தினார்கள். ஸ்ரீதேவி மரணத்திற்கு காரணமாக அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று பலர் பலவிதமான காரணங்களை கூறியதால், அவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வந்தது.

 

இந்த நிலையில், ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழியான பிங்கி ரெட்டி, பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் புதிய தகவல் ஒன்றை கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து கூறிய பிங்கி ரெட்டி, “ஸ்ரீதேவி துபாய் கிளம்புவதற்கு முன்பாக என்னிடம் போனில் பேசினார். அப்போது அவருக்கும், கடும் ஜுரம் இருப்பதாக என்னிடம் கூறினார், ஆண்டிபயோடிக் மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றாலும் திருமணத்திற்கு நிச்சயம் சென்றே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால், அவர் இறந்த பிறகு அவரை பற்றி வரும் பல்வேறு வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் பற்றி பலர் பலவிதமாக பேசிவருவது வருத்தமளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

2080

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery