Latest News :

மீனவர்களின் கண்ணீர் வாழ்க்கையை சொல்லும் ‘முந்தல்’ பட பாடல்!
Tuesday March-06 2018

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முந்தல்’ தணிக்கை குழுவினரின் பாராட்டோடு யு சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் கதையம்சம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிரடியான அட்வென்சர் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சித்த வைத்தியத்தின் முக்கியத்துவத்தையும், நம் நாட்டு உணவு பழக்கம் எத்தகைய மருத்துவ குணங்களை கொண்டது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதை அட்வைஸ் போல அல்லாமல் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பல சாகசக் காட்சிகளுடன் சொல்லியிருப்பது தான் படத்தின் ஸ்பெஷல்.

 

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது போல படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது. மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலை, கனி அமுதன், மதன்குமார், தர்மபுத்திரன் ஆகியோர் பாடல்களுக்கு கே.ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார்.

 

அண்ணாமலை வரிகளில் உருவாகியுள்ள “அஸ்கா புஸ்கா...” பாடல் ஆட்டம் போடும் வகையில் செம குத்துப்பாடலாக உருவாகியிருக்கிறது. தர்மபுத்திரன் வரிகளில் உருவாகியுள்ள மீனவர்கள் பற்றிய பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் மீனவர்கள் பற்றிய பாடல்கள் என்பது அறிதான ஒன்று தான். அப்படி ஒரு படத்தில் மீனவர்களைப் பற்றி பாடல் வந்தால் அந்த பாடலும், படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 

 

அந்த வரிசையில், ”கண்ணீர தான் துடைக்க தண்ணீரில் போறோம்...காற்றையும் அலையையும் போறாடி வாறோம்...மீனவர் வாழ்க்கை எல்லாம் மீளாத சோகம்...கண் இருந்தும் இருட்டு வாழ்க்கை வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும்...கரைக்கு வந்தா பிள்ளைக்கு அப்பா...இல்லனா கடலுக்கே உப்பா...” என்ற வரிகைகளைக் கொண்ட ‘முந்தல்’ மீனவப் பாடலும் நிச்சயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்பாடலோடு இடம்பெற்றுள்ள மற்ற பாடல்கள் என படத்தில் உள்ள 5 பாடல்கள் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை கவரும் பாடல்களாக அமைந்துள்ளது.

 

வேல்முருகன், பிரியா இமேஷ், அனிதா கார்த்திகேயன் என முன்னணி பாடகர்கள் பாடியுள்ள இப்பாடல்கள் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related News

2085

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery