சிறப்பாக எடுக்கப்படும் உணர்வுபூர்வமான குறும்படங்கள் மக்கள் மனதில் என்றுமே தனக்கென ஒரு இடம் பிடிக்கும். திலிப் குமார் இயக்கத்தில் கிஷோர், யாஸ்மின் பொன்னப்பா ஆகியோர் நடிப்பில் உருவாகிய 45 நிமிட குறும்படம் 'கல்கி' உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது.
இது ஒரு இயற்பியலாளருக்கும், தனது வயதில் பாதி வயதே இருக்கும் தனது காதலிக்கும் இடையே நடக்கும் உணர்வுப்பூர்வமான குறும்படம் தான் 'கல்கி'. இந்த குறும்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் உலகமெங்கும் கிடைத்துவருகிறது.
தற்பொழுது இந்த குறும்படத்தை டிஜிட்டல் உலகின் முன்னோடி 'Netflix' நிறுவனம் வாங்கியுள்ளது. இது இந்த குறும்படத்தின் பலத்தையும் மதிப்பையும் மேலும் பல மடங்கு கூட்டியுள்ளது. 'கல்கி' யின் வெற்றி அதன் இயக்குனர் திலிப் குமாருக்கு ஒரு பட வாய்ப்பை பெற்று தந்துள்ளது. இந்த செய்தி மேலும் பலரை குறும்படங்கள் மூலம் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் என நம்பப்படுகிறது. 'கல்கி' குறும்படத்தை 'பிரமோத் பிலிம்ஸ்' சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...