சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், அவர் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள மூன்று படங்கள் வெளியாக முடியாமல் தவித்து வருகிறது. இதனால் சந்தானம் என்ற ஒரு நடிகரையே ரசிகர்கள் மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.
இதை இப்படியே விட்டுவிட்டால், ரோட்டில் நடந்து சென்றால் கூட தன்னை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள், என்று நினைத்த சந்தானம், எப்படியாவது தனது படத்தை ரிலீஸ் செய்திட வேண்டும், என்று அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், தனது நடிப்பில் வெற்றி பெற்ற ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தொடங்கிவிட்டார்.
சந்தானத்தின் சொந்த நிறுவனமான ஹண்ட் மேட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தில்லுக்கு துட்டு 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். ராம்பாலா இயக்க, தீபக் குமார்பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷபிர் இசையமைக்கிறார்.
வரும் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...