Latest News :

வாய்ப்புக்காக படுக்கை - முன்னணி நடிகையின் பரபரப்பு பேட்டி!
Saturday March-03 2018

சினிமாத் துறையில் வாய்ப்புக்காக நடிகைகள் பலர் படுக்கையை பகிர்ந்துக் கொளவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், பல நடிகைகள் தங்களது நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பெங்களூரில் அளித்த பேட்டியில், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங், “நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை  கற்கத் துவங்கிவிட்டேன்.

 

நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சில சமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன். 

 

நாட்டில் நடக்கும் பலாத்காரங்களை மக்கள் மறந்துவிடுகிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம், அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.

 

நான் 20 படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும். சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எப்படி டென்று தெரியவில்லை. என்னை சுற்றி நல்லவர்களே உள்ளனர். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.” என்று தெரிவித்துள்ளார்.

 

கார்த்தி, சூர்யா என்று தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், விரைவில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக உருவெடுப்பார் என்று கோடம்பாக்கமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Related News

2096

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery