கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது ஒவ்வொரு படத்தின் மூலமாக ரசிகர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இயக்குநர் விஜய், தனது படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மேலோங்கி இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அவரது படங்களைப் போல, அப்படங்களின் பாடல்கள் மற்றும் அதன் பீஜியமும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவைகளாக இருக்கும்.
அந்த வரிசையில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கரு’ படத்தின் பாடல்களும் மக்களின் மனதிற்கு நெருக்கமான பாடல்களாக அமைந்திருக்கிறது.
இப்படத்தின் மூலம் ‘பிரேமம்’ புகர் சாய் பல்லவியும், தெலுங்கு நடிகர் நாக செளர்யாவும் தமிழில் அறிமுகமாகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பாகும்.
விஜய் தனது ரெகுலரான கூட்டணியை உடைத்து முதல் முறையாக தனது குழுவின் புதிய இசையமைப்பாளரை இணைத்துக் கொண்டுள்ளார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கவணிக்கத்தக்க ஒரு நபராக உருவெடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள ‘கரு’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து கூறிய இயக்குநர் விஜய், “சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துக் கொண்டு அசத்துபவர் அவர். இந்த படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லா படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். ‘கரு’ படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்த்ரிஉக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்ப்பார்த்தது தான். இந்த பாடல்களை போல்வே படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என நான் உறுதியாக கூறுவேன்.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...