’குற்றம் 23’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரெதான் - தி சினிமா பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார், மீண்டும் அருண் விஜயை வைத்து தயாரிக்கும் படம் ‘தடம்’. மிகபிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக தான்யா ஹோப், ஸ்முருதி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மகிழ் திருமேணி - அருன் விஜய் கூட்டணியில் ‘தடையறத்தாக்க’ பெரும் வெற்றி பெற்றதால், இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படமான ‘தடம்’ மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தமிழ் புத்தாண்டுக்கு ‘தடம்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...