’மெர்சல்’ படம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல்வாதிகள் கூர்ந்து கவணித்து வருகிறார்கள். தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இன்றி தேசிய அரசியல்வாதிகளும் விஜய் மீது ஒரு கண் வைத்திருக்க, அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல்கள் சில கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக வருகிறாராம். அத்துடன் ஏழை மாணவர்களின் படிப்புக்காக தனது சொத்துக்களை செலவழிக்கும் விஜய், கல்வித் துறையில் நடைபெறும் வியாபாரத்திற்கு எதிராகவும் சில நடவடிக்கைகளை எடுப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
இதில் விஜய்க்கு வில்லனாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரு.பழனியப்பன் நடிக்கிறார். மற்றொரு வில்லனாக ராதாரவி நடிக்கிறார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...