’மெர்சல்’ படம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அரசியல்வாதிகள் கூர்ந்து கவணித்து வருகிறார்கள். தமிழக அரசியல்வாதிகள் மட்டும் இன்றி தேசிய அரசியல்வாதிகளும் விஜய் மீது ஒரு கண் வைத்திருக்க, அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல்கள் சில கசிந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக வருகிறாராம். அத்துடன் ஏழை மாணவர்களின் படிப்புக்காக தனது சொத்துக்களை செலவழிக்கும் விஜய், கல்வித் துறையில் நடைபெறும் வியாபாரத்திற்கு எதிராகவும் சில நடவடிக்கைகளை எடுப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
இதில் விஜய்க்கு வில்லனாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கரு.பழனியப்பன் நடிக்கிறார். மற்றொரு வில்லனாக ராதாரவி நடிக்கிறார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...