சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் நடிகை கஸ்தூரி, அதனாலேயே மக்களிடம் பிரபலமடைந்து வருகிறார். ரஜினி, கமல், ஜெயலலிதா, கருணாநிதி என்று எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் குறித்து அவ்வபோது கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், கஸ்தூரியை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இதற்கிடையே, கடந்த 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுவனை அடித்தும் கொன்ற சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டரில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில், கஸ்தூரி கூறி வரும் கருத்துக்களால் இரு சமூகத்தினரிடையே சண்டை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஒரு அமைப்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறது.
இந்த புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தால், சமூகத்தில் கலவரம் ஏற்படும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக கஸ்தூரி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...