கடந்த ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தென்னிந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு ஏராளமானோர் ரசிகர்களாகிவிட்டார்கள்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை, ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்ஸாதா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சாந்தா ரவி கே.சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனின் வாரிசு என்பதும், இப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைக்க, கலை இயக்கத்தை கிரண் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கி வைத்தார். இதன் போது தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்வப்னா தத்து - வைஜெயந்தி மூவீஸ், கே எஸ் ராமாராவ் - கிரியேட்டீவ் கமர்சியல், பி வி என் பிரசாத் - எஸ் வி சி, நவீன் மற்றும் ரவி மைத்ரீ மூவிஸ், ஆகியோர்களுடன் தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வம்சி, சந்தீப் ரெட்டி வங்கா, படத்தின் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா, இயக்குநர் ஆனந்த் சங்கர், நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன் பிர்ஸாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...