‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் ‘டிக் டிக் டிக்’, ‘பார்ட்டி’, ’ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் நிவேத பெத்துராஜுக்கு, ரசிகர்கள் சிலர் தவறான மெசஜை தொடர்ந்து அனுப்புவதால் அவர் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். முன்னதாக ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, அது நிவேதா பெத்துராஜ் தான் என்றும் கூறப்பட்டது. தற்போது அந்த வீடியோவை முன் வைத்து சிலர் நிவேதாவுக்கு மெசஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரசிகர்களின் இதுபோன்ற தவறான மெசஜால் வருத்தமடைந்த நிவேதா பெத்துராஜ், திடீரென்று தனது ட்விட்டர் கணக்கை ரத்து செய்து விலகிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு அதிச்சியளித்துள்ளது. ஆனால், இன்ச்டாகிராமில் மட்டுமே இனி தொடர்பில் இருப்பேன், என்று நிவேதா கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...