Latest News :

பட வாய்ப்பு இல்லாததால் ஆண்ட்ரியாவின் புது ரூட் - 1 மணி நேரத்திற்கு 3 லட்சம்!
Thursday March-08 2018

தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்த நடிகை ஆண்ட்ரியா பல படங்களில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து வந்ததோடு, சில படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு வந்தார். இதற்கிடையே அவர் இறுதியாக நடித்த ‘தரமணி’ என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

 

விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ‘தரமணி’ வெற்றி பெற்றதால், ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்கும் என்று ஆண்ட்ரியா எதிர்ப்பார்த்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்ப்பு வீணாய் போனது தான் மிச்சம். ஆம், தமிழில் ஆண்ட்ரியா வசம் ஒரு படம் கூட இல்லை. இதனால் ரொம்பவே உடைந்து போன ஆண்ட்ரியா, தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளார்.

 

கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் உடனே ஓகே சொல்கிறாராம். ஆனால், அதற்காக அவர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் கேட்கிறாராம்.

 

இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட துணிக்கடைகளின் புதிய கிளைகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த கிளைகள் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஆண்ட்ரியா ரூ.3 லட்சம் கேட்டாராம். அதுவும் நிகழ்ச்சிக்கு அவர் வந்தால் ஒரு மணி நேரம் தான் இருப்பேன், என்ற கண்டிஷனோடு கலந்துக்கொள்கிறாராம். ஆண்ட்ரியா கேற்கும் சம்பளத்திற்கும், அவர் போடும் கண்டிஷனுக்கும் ஒகே சொன்ன நிறுவனம், சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட மூன்று கிளைகளுக்கும் ஆண்ட்ரியாவையே அழைத்தார்களாம்.

Related News

2131

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery