Latest News :

ரஜினி படத்தில் நடித்தால் தான் நடிகையா? - மாணவர்கள் முன்பு ஆத்திரப்பட்ட ஆண்ட்ரியா!
Friday March-09 2018

’தரமணி’ படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை ஆண்ட்ரியா, கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருவதும், அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் கட்டணம் பெறுவதையும் நேற்று நமது தளத்தில் தெரிவித்திருந்தோம்.

 

இதற்கிடையில், தனக்கு பட வாய்ப்புகள் இல்லாதது குறித்து ஆண்டிரியா ஆத்திரப்பட்ட சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.

 

ஆம், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்கள். அந்த வரிசையில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்துக் கொண்டார்.

 

அப்போது பெண்கள் முன்னேற்றம் மற்றும் அடக்குமுறை குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆண்ட்ரியா, ”‘தரமணி’ என்ற படத்தில் நான் நடித்திருந்தேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த படத்தில் எனது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு, படத்தையும் பாராட்டினார்கள். வியாபார ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் அப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. ஒரு படம் கூட எனக்கு இல்லை.

 

இதே ஒரு முன்னணி ஹீரோவுடன் மூன்று டூயட் பாடல், ரொமான்ஸ் காட்சிகள் என்று நான் நடித்திருந்தால், எனக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்திருக்கும், நானும் முன்னணி ஹீரோயினாகியிருப்பேன். இது தான் தமிழ் சினிமாவின் நிலை. ஏன், முன்னணி நடிகர்களுடன் நடித்தால் தான் அவர்கள் நடிகையா?, ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்தால் தான் நடிகை என்று ஏற்றுக்கொள்வீர்களா? நடிப்பு திறன் படைத்த நடிகைகளை நடிகையாகவே பார்க்க மாட்டீர்களா?” என்று மாணவர்கள் முன்னிலையில் ஆத்திரப்பட்டு பேசினார்.

Related News

2140

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery