மலையாள நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதை கேரள காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் நடிகை அமலா பாலும் சிக்கினார். பாண்டிச்சேரில் உள்ள போலியான முகவரி ஒன்றை கொடுத்து அவர் சொகுசு கார் வாங்கிய விவாகரத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரிதீவ்ராஜ், சொகுசு கார் வாங்கியதற்காக ரூ.50 லட்சத்தை வரியாக செலுத்தியுள்ளார்.

பெங்களூரில் உள்ள ஷோரூமில் இத்தாலி நாட்டு காரான லம்போகினி கார்ரை ரூ.2.13 கோடிக்கு பிரிதீவ்ராஜ் வாங்கியுள்ளார். இந்த கார் நேற்று முன் தினம் பிரீதீவ்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளம் காக்கநாட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு செய்ய காரை கொண்டு வந்த அவர், வரியாக ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்து 500 - ஐ ரொக்கமாக செலுத்தினார்.
மேலும், தான் விரும்பிய பதிவு எண் கே.எல்.7 சி.எண்.1 என்ற எண்ணை அவர் கேட்டார். இதே பதிவு எண்ணை மேலும் 4 பேர் கேட்டனர். இதனால் ஆர்.டி.ஓ அந்த நம்பரை ஏலத்தில் விட, ரூ.7 லட்சம் கொடுத்து பிரீத்விராஜ் அந்த எண்ணை பெற்றார். இதனால் வெளிநாட்டு காரை வாங்கியதால் பிரீதிவிராஜ் கூடுதலாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை கேரள அரசுக்கு செலுத்தியுள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...