மலையாள நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதை கேரள காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் நடிகை அமலா பாலும் சிக்கினார். பாண்டிச்சேரில் உள்ள போலியான முகவரி ஒன்றை கொடுத்து அவர் சொகுசு கார் வாங்கிய விவாகரத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரிதீவ்ராஜ், சொகுசு கார் வாங்கியதற்காக ரூ.50 லட்சத்தை வரியாக செலுத்தியுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஷோரூமில் இத்தாலி நாட்டு காரான லம்போகினி கார்ரை ரூ.2.13 கோடிக்கு பிரிதீவ்ராஜ் வாங்கியுள்ளார். இந்த கார் நேற்று முன் தினம் பிரீதீவ்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளம் காக்கநாட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு செய்ய காரை கொண்டு வந்த அவர், வரியாக ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்து 500 - ஐ ரொக்கமாக செலுத்தினார்.
மேலும், தான் விரும்பிய பதிவு எண் கே.எல்.7 சி.எண்.1 என்ற எண்ணை அவர் கேட்டார். இதே பதிவு எண்ணை மேலும் 4 பேர் கேட்டனர். இதனால் ஆர்.டி.ஓ அந்த நம்பரை ஏலத்தில் விட, ரூ.7 லட்சம் கொடுத்து பிரீத்விராஜ் அந்த எண்ணை பெற்றார். இதனால் வெளிநாட்டு காரை வாங்கியதால் பிரீதிவிராஜ் கூடுதலாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை கேரள அரசுக்கு செலுத்தியுள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...