’வானவராயன் வல்லவராயன்’, ‘சிகரம் தொடு’ ஆகிய தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மோனல் கஜார். குஜராத்டஹி சேர்ந்த இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் குஜராத்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துக் கொண்அ அவர், அங்கிருந்து திரும்பும்போது தெருவோரம் நிறுத்திய தனது காரரை எடுக்கும் போது, அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் நபர் ஒருவர் மோனல் கஜாரின் காரின் முன்பு சிறுநீர் கழித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான மோனல், தொடர்ந்து தனது காரின் ஆரனை அடித்தாராம்.
ஆனால், ஆரன் சத்தத்தை சட்டை பண்ணாத அந்த நபர் தொடர்ந்து தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்ததோடு, வேலை முடிந்ததும் மோனல் காஜரிடம் வந்து, எதற்காக ஆரன் அடித்தாய், என்று சத்தம் போட்டுள்ளார்.
மேலும், தகாத வார்த்தைகளால் மோனலை திட்டியும் உள்ளார். இதனை தனது செல்போனில் படம் பிடித்த மோனல், அதை போலீசிடம் கொடுத்து புகார் செய்ததை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து அவர் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளார்களாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...